ரேசன் எடையில் தில்லுமுல்லு
கம்ப்ளயின்ட் கொடுக்க சென்றார்
கவர்ன்மென்ட் ஆபிஸ் அருகே
டீக்கடையில் கூசாமல் லஞ்சம்
ஆயிரம் ருபாய் சட்டை போட்டிருக்கும்
ஆறாயிரம் ருபாய் சம்பள அதிகாரி
புகார் கொடுக்க செல்லுமிடத்தில்
ஏழை பெண்ணின் கற்புக்கு
விலை பேசும் காவல் அதிகாரிகள்
கோவிலுக்கு சென்றால்
தரிசனம் செய்ய லஞ்சம்
பூசாரிக்கு கையூட்டு
பிரசாதம் கொடுக்க
விரக்தி அடைகிறார்
வீரிட்டு வரும் அழுகை
அடக்குகிறார் தனிமையில்
பீறிடுகிறது இதயம்
வேகமாக செல்கிறார்
எம்.எல்.ஏ கட்டிய பாலம் மீது
இடிந்து நொறுன்குகிறார் சேர்ந்து
கான்றேக்டரின் தவறில்
ஆட்டோவிற்கு அதிக காசு
அவசரமாக விரைந்திட
அரசு ஆஸ்பத்திரியில்
அல்பாயுசில் பரலோகம்
செல்கின்றார்
கவனிக்க டாக்டரின்றி
பாவம் நம் நாயகன்
***
வடகரைவேலன் எழுதிய
கதம்பம் - 15/03/10 படித்தேன்.
இது அதில் வரும் ஒரு கவிதைக்கு மாற்று.Like I said to Writer Payon once... this is my self styled paraphrase. :-)

